மிழில் "வேறென்ன வேண்டும்' என்ற படத்தில் அறிமுகமாகிறார் ப்ரெர்னா கன்னா. ஏற்கெனவே பள்ளியில் படிக்கும் காலத்தில் "ராமா, ராமா, கிருஷ்ணா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து அது நல்ல வசூலையும் கொடுத்ததாம்.

Advertisment

heroine

அந்தப் படத்தைப் பார்த்த பலர் இவருக்கு வாய்ப்புக் கொடுக்க முன் வந்தார்களாம். ஒரு இயக்குநர் இவரை ஆடிஸனுக்காக வரச் சொன்னாராம். அதுவும் தனியாக ஹோட்டல் அறைக்கு வரும்படி சொன்னாராம். தான் இயக்கப் போகும் படத்தில் கதாநாயகி வாய்ப்புக்காக வரச் சொன்ன அவர், குறிப்பாக அம்மாவை உடன் அழைத்து வரக்கூடாது என்று அமுத்தி அழுத்தி சொன்னாராம்.

heroineஇதில் சந்தேகம் அடைந்த ப்ரெர்னா கன்னா அம்மாவையும் அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு போனாராம். அங்கு அவருடைய கண் மையை அழித்துவிட்டு வரும் படி கூறியிருக்கிறார் டைரக்டர். ப்ரெர்னா முகம் கழுவ சென்றபோது, அந்த நடிகர் உள்ளே வந்து ப்ரெர்னாவை பின்பக்கமாக கட்டிப் பிடித்து முத்தமிட முயன்றிருக்கிறார்.

Advertisment

உடனே அவரைத் தள்ளிவிட்டிருக்கி றார். 17 வயதில் நடந்த அந்த நிகழ்வு ப்ரெர்னாவை ரொம்பவே பாதித்ததாம்.

அதைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் வந் தாலும், படிப்பை முடித்த பிறகே நடிப்பது என்று முடிவெ டுத்தாராம்.

தமிழிலும் இதுபோன்ற விஷயங்களை அவர் சந்தித்ததாக சொல்கிறார். சினிமாவில் கதாநாயகி ஆகவேண்டும் என்றால் செக்ஸுவலாக அட்ஜஸ்ட் பண்ணனும் என்று ப்ரொர்னாவின் மேனேஜரிடம் சிலர் கூறினார்களாம். பொதுவாக இப்போது தொடங்கியிருக்கும் மீ டூ இயக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே பாதுகாப்பு கொடுக்கிறது என்று சொல்கிறார் ப்ரெர்னா.

Advertisment

நல்லாக் கேட்டுக்குங்க ஆண்களே உங்களுக்கு நடந்த கொடுமைகளை பகிரங்கமாக சொல்லச் சொல்கிறார் ப்ரெர்னா.